கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை, மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த், கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்களால் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து உணவு வகைகள் குறித்த கண்காட்சி மற்றும் கோலக் கண்காட்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் அவர்கள் பார்வையிட்டார்கள்.
No comments:
Post a Comment