பொன்ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் திட்டுவிளை-கிளை துவக்கவிழா திட்டுவிளை ஜூம்ஆ பள்ளிவாசல் எதிர்புறம் வைத்து திட்டுவிளை இமாம் H.M. ஸயீது ரஹ்மானி தலைமையில் நடைபெற்றது. இஸ்லாமிய அறக்கட்டளை தலைவர் N.H. முகமது ராஃபிஹ் திட்டுவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் ஆனந்த் முன்னிலை வகித்தனர், பூதப்பாண்டி காவல் ஆய்வாளர் முத்துராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
திட்டுவிளை C.S.I சேகர தலைமை போதகர் G.N. இராஜகுமார், மார்த்தால் பங்குதந்தை K. மரியதாஸ் ஆகியோர் பிரார்த்தனை செய்தனர். கேட்சன் அவர்கள் துவக்கி வைத்தார் பரிசோதனை முறைகளை பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர் தாஸ் அறிமுகப்படுத்தினார்.
தடிக்காரங்கோணம் ஊராட்சி மன்ற தலைவர் பிராங்கிளின், ஞாலம் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ் தோவாளை ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பூதலிங்கம்பிள்ளை நாஞ்சில் செல்வராஜ், மாஹின் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பொன்ஜெஸ்லி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் நன்றியுரை கூறி நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment