பெரியார் மண்ணை விட்டு வருத்தத்துடன் செல்கிறேன் - ராகுல் பேட்டி. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 September 2022

பெரியார் மண்ணை விட்டு வருத்தத்துடன் செல்கிறேன் - ராகுல் பேட்டி.

ராகுல் காந்தி தமிழகத்தில் மேற்கொண்ட நடைபயணம் இன்றுடன் முடிவடைந்துள்ளது, நாளை காலை பாறசாலை வழியாக திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். 


அவர் தனது பயணத்தின் இடையே விவசாய சங்கத் தலைவர் பி. ஆர். பாண்டியன், வில்லேஜ் குக்கிங் சேனல் பிரமுகர்கள், உள்ளிட்ட பல்வேறு நபர்களையும் சந்தித்துப் பேசினார்.


தமிழகத்தில் தனது நடைபயணத்தை நிறைவு செய்த பின்னர் பேசிய ராகுல் காந்தி, "நடைபயணத்திற்கு வரவேற்பு கொடுத்த மக்களுக்கு எனது நன்றி. மக்களின் உழைப்புக்கான ஊதியம் கிடைக்கவே இந்த நடைபயணம். தமிழக மக்களிடம் தனிப்பட்ட ஈடுபாடு உண்டு. நான் பெரியார் மண்ணை விட்டு வருத்தத்துடன் திரும்பி செல்கிறேன். " எனத் தெரிவித்துள்ளார். 


மேலும் பேசிய அவர், "சாதி, மதம் என மக்களை பிரித்து கொண்டிருக்கின்றனர். குறிப்பிட்ட சிலருக்கு, பெரு வணிகம் செய்பவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக மக்களுக்கு அநீதி அளித்து வருகின்றனர். 


ஒரு இந்தியர் மற்ற இந்தியரை ஒதுக்க வேண்டும், நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக செயல்படுகின்றனர். " என பாஜகவை விமர்சித்தார்.

No comments:

Post a Comment