வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 September 2022

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிக்காட்டுதலின்படி வாக்காளர் பட்டியலினை 100% செம்மையாக்கும் பொருட்டும், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் தனித் தகவல்களை உறுதிப்படுத்திடவும், ஒரு வாக்காளரின் விபரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது இருவேறு தொகுதிகளில் இடம் பெறுதல் ஆகியவற்றை தவிர்க்கும் பொருட்டும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை ஆதார் எண்ணை இணைக்கும் பணி 01.08.2022 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.


இது தொடர்பாக பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக தங்களது பகுதியில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகளில் 04.09.2022 அன்று சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. எனவே கன்னியாகுமரி மாவட்ட வாக்காளர்கள் அனைவரும் தாமாக முன்வந்து வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அடையாள அட்டையுடன் மேற்படி சிறப்பு முகாம் அன்று தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியை அணுகி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

No comments:

Post a Comment