கன்னியாகுமரி மாவட்டத்தில் தண்டவாளங்களில் ரயில்வேபோலீஸ் அதிரடி சோதனை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 June 2023

கன்னியாகுமரி மாவட்டத்தில் தண்டவாளங்களில் ரயில்வேபோலீஸ் அதிரடி சோதனை.

குமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ஒடிசா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ரயில் விபத்தில் 288 பேர் வரை உயிரிழந்த னர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவங்களை தொடர்ந்து ரயில்கள் பாது காப்பு, தண்டவாளங்கள் பராம ரிப்பு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.


இதற்கிடையே தமிழ் நாட்டில் அரியலூர் அருகே தண்டவாளத்தில் டயர் வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடந்தது. இதில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் அதிரஷ்ட வசமாக தப்பியது. இதே போல் சென்னை அருகே உள்ள திருநின்றவூர் பகுதி யில் நேற்று முன்தினம் நள் ளிரவில் தண்டவாளத்தில் தென்னை மர கட்டைகள் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.


அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக வந்த னர். ரயில்கள் தப்பின. இது குறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர். 


அதன்படி நாகர்கோ வில் ரயில் நிலையத்துக் குட்பட்ட தண்டவாள பகுதியில் இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால் தலைமையில் எஸ்.ஐ.க்கள் மற்றும் போலீ சார் சோதனையில் ஈடு பட்டனர். நாகர்கோவில் வாள சந்திப்பு ரயில் நிலையத் தில் தொடங்கி குழித்துறை மேற்கு வரையிலும், மறு புறம் நெல்லை மேலப் பாளையம் வரையிலும் நாகர்கோவில் ரயில்வே போலீஸ் கட்டுப்பாட்டில் வருகிறது அந்தப் பகுதி முழுவதும் சோதனை நடத்தப்பட்டது நுழைந்த ரயில் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் தரப்பில் உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்

No comments:

Post a Comment