நாடு முழுவதும் இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் .பி.என்.ஸ்ரீதர், தலைமையில் அரசு அலுவலர்கள் பணியாளர்கள் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.


இவ்வுறுதிமொழியில் இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் எனவும், தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்ற இயன்றவரை பாடுபடுவேன் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சிவப்பரியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுப்பையா, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் நாகராஜன், கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் .சுப்பையா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கீதா, உசூர் மேலாளர்கள் சுப்பிரமணியன், ஜீலியன் ஹீவர், ஆதி திராவிடர் நல தனி வட்டாட்சியர் .கோலப்பன் உட்பட அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment