தமிழகத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 93 மாணவ, மாணவிகளுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும், இணையதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ள பள்ளிகளில் 9 அல்லது 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்ப டும். தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடி ப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்வுக்கு 10.8.2023-க்குள் https://yet.nta.ac.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 29-ந் தேதி நடைபெறும்.
No comments:
Post a Comment