கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை தகுதி தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் -மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தகவல். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 26 July 2023

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை தகுதி தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் -மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தகவல்.


பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு 10.8.2023-க்குள் https://yet.nta.ac.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும் நாகர்கோவில் குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2023-24-ம் நிதியாண்டில் நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர் மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழகத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 93 மாணவ, மாணவிகளுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும், இணையதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ள பள்ளிகளில் 9 அல்லது 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.


9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்ப டும். தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடி ப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்வுக்கு 10.8.2023-க்குள் https://yet.nta.ac.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 29-ந் தேதி நடைபெறும். 

No comments:

Post a Comment