119-வது பிறந்தநாள் விழா - நாகர்கோவிலில் சி.பா. ஆதித்தனார் படத்துக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 September 2023

119-வது பிறந்தநாள் விழா - நாகர்கோவிலில் சி.பா. ஆதித்தனார் படத்துக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 119-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு நாகர்கோவில் மாலைமலர் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் உருவப்படத்திற்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 


தி.மு.க. சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் மாநகர செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகி களும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். குமரி மாவட்ட திருக்கோவில்கள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணனும் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட பொருளாளர் முத்துராமன் மரியாதை செலுத்தினார். 


இதில் சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் மண்டல தலைவர் அன்பு கிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட பொருளாளர் தங்கவேல், மாநகர செயலாளர் அனிஷ், குருந்தன்கோடு ஒன்றிய செயலாளர் சுவாமி நாடார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கோபாலகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment