அஞ்சுகிராமம் அருகே உள்ள மருங்கூர் குமாரபுரம் தோப்பூரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 50), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு அனீஸ் (15) என்ற மகன் உள்ளார். இவர்கள் தற்பொழுது ராஜாவூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அனீஸ் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
அனீசுக்கு நேற்று திடீரென வாந்தி ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக பக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அனீசுக்கு ஊசி போட்டு சிகிச்சை அளித்தனர். பின்னர் அனீசை அவரது தாயார் ராஜேஸ்வரி வீட்டிற்கு அழைத்து வந்தார். அனீசை வீட்டில் விட்டுவிட்டு ராஜேஸ்வரி வெளியே சென்று இருந்தார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்தபோது அனீஸ் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி அவரை உடனடியாக மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு அனீசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதை கேட்டு அதிர்ச்சி யடைந்த ராஜேஸ்வரி கதறி அழுதார். இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உறவி னர்கள் ஏராளமா னோர் ஆஸ்பத்திரியில் திரண்டனர். பலியான அனீஸ் உடலை முதலில் சிகிச்சை அளித்த ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். தவறான சிகிச்சையால் மாணவன் இறந்து விட்டதாக ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவி டப்பட்டது. இதை யடுத்து அனீசின் உடல்பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பலியான அனீஸ் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமா னோர் அங்கு திரண்டு உள்ளனர். பிரேத பரிசோதனையில் தான் அனீஸ் எப்படி இறந்தார் என்று தெரியவரும்.
- கன்னியாகுமரி செய்தியாளர் என். சரவணன்
No comments:
Post a Comment