மார்த்தாண்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 9 October 2023

மார்த்தாண்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் அணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மார்த்தாண்டம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருகிற 17-ந்தேதி தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழகிய மண்டபத்தில் கலந்துகொள்ள இருக்கும் மாவட்ட இளைஞரணி ஊழியர் கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்தும், வருகிற 14-ந்தேதி சென்னையில் நடைபெற இருக்கும் மகளிர் உரிமை மாநாடு ஆயத்த பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரெமோன், பப்புசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெகநாதன், மாவட்ட துணை செயலாளர்கள் புஷ்பலீலா ஆல்பன், ராஜூ, ஒன்றிய செயலாளர்கள் டி.பி.ராஜன், வழக்கறிஞர் ராஜேஷ்குமார், குழித்துறை நகர செயலாளர் வினுக்குமார், பேரூர் செயலாளர்கள் சத்யராஜ், ஆனந்த ராஜன், மணி, உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


- கன்னியாகுமரி செய்தியாளர் என். சரவணன்

No comments:

Post a Comment