கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒற்றையல்விளை அரசு மேல்நிலைப்பள்ளியும் விவேகானந்தா கேந்திர மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து நாட்டு நலப்பணி திட்ட முகாம் P.T.செல்வகுமார் துவக்கி வைத்தார்.
இந்தியாவின் தென்கோடியாம் கன்னியாகுமரி மாவட்டம் ஒற்றையால் விலை அரசு மேல்நிலைப்பள்ளி ஒற்றியால்விளை மற்றும் விவேகானந்தபுரம், விவேகானந்தா கேந்திர மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய நாட்டு நலப்பணி திட்ட முகாம் விவேகானந்தா கேந்திர மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பாலசுந்தர் தலைமை தாங்கினார். ஒற்றியால்விளை, அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வெங்கடேஷ் குமார், விவேகானந்தா கேந்திர மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ராஜ்குமார் முன்னிலை வைத்தனர். சிறப்பு விருந்தினராக சமூக சேவகரும், கலப்பை மக்கள் இயக்கம் நிறுவன தலைவருமான P.T.செல்வகுமார் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் சிறப்பு உரையாத்தினார்.
நிகழ்வில், திட்ட துணை தலைவர் அஜித், கலப்பை மக்கள் இயக்க இலக்கிய பிரிவு தலைவர் காப்பிதுரை மற்றும் நாட்டு நலப்பணி திட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment