ஏழைகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கிய விஜய் வசந்த் எம்.பி. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 15 December 2023

ஏழைகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கிய விஜய் வசந்த் எம்.பி.


கன்னியாகுமரி: குமரி மேற்கு மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி மேற்கு மாவட்ட அலுவலகத்தில் வைத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 77- வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பிறந்தநாள் விழாவிற்கு காங்கிரஸ் கமிட்டி மேற்கு மாவட்ட தலைவர் பினுலால் சிங் தலைமை தாங்கினார். 

தமிழக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற துணைத்தலைவர், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார்கள். மேலும் ஏழைகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி சிறப்பித்தார். 


நிகழ்ச்சியில் குழித்துறை திமுக நகர் மன்ற தலைவர் திரு.பொன். ஆசைத்தம்பி, மாநிலபொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், மாநில பொதுச் செயலாளர்கள் ஆஸ்கர் பிரிடி, பால்ராஜ், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர், யூசுப்கான், குமரி மேற்கு காங்கிரஸ் சேவாதள மாவட்ட தலைவர் ஜோசப் தயாசிங், காங்கிரஸ் கமிட்டி பத்மனாபபுரம் நகர தலைவர் ஹனுகுமார், மகிளா காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவி ஷர்மிளா ஏஞ்சல், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர் மற்றும் காங்கிரஸ் பேரியக்க மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், வட்டார தலைவர்கள், நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், பேரூராட்சி தலைவர்கள், நிர்வாகிகள், ஊராட்சிமன்ற நிர்வாகிகள், காங்கிரஸ் பேரியக்க துணை அமைப்புகளின் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.


- கன்னியாகுமரி செய்தியாளர் சரவணன்.

No comments:

Post a Comment