மாவட்ட காவல் அலுவலகத்தில் தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதி மொழி ஏற்பு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 30 January 2024

மாவட்ட காவல் அலுவலகத்தில் தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதி மொழி ஏற்பு.


கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில்  தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் IPS தலைமையில் காவல்துறையினர் மற்றும்  அமைச்சுப்பணியாளர்கள் 2 நிமிடம் மவுனம் கடைப்பிடிக்கப்பட்டு பின்னர் கீழ்கண்டவாறு உறுதி மொழி எடுக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன்/குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாக கொண்டு எவர்  மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன். 


அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கிணங்க சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய  அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமாற உறுதியளிக்கிறேன். 

No comments:

Post a Comment