கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.கஞ்சா விற்பனை செய்பவர்களை தனிப்படைகள் அமைத்து கண்டறியப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் காவல்துறை இயக்குநர். சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் மாவட்டத்தில் கஞ்சா விற்பவர்களின் வங்கி கணக்குகளை முடக்கி விடப்படும் என்று எச்சரித்திருந்தார்.
அதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 1 மாதத்தில் மட்டும் கஞ்சா விற்பனை செய்தவர்களின் 91 வங்கி கணக்குகள் முடக்க பரிந்துரை செய்யப்பட்டு 59 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் மேலும் கஞ்சா விற்பனை செய்பவர்களின் உறவினர்கள் வங்கி கணக்குகள் கஞ்சா விற்பனைக்கு பயன்பட்டு இருந்தால் அந்த கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், விற்பனையில் ஈடுபட்ட நபர்களின் உறவினர்களின் வங்கி கணக்கை பயன்படுத்தி கஞ்சா வாங்கவோ விற்கவோ பயன்படுத்துவது பற்றி தெரிய வந்தால் அந்த வங்கி கணக்கினையும் முடக்க வங்கிகளுக்கு மாவட்ட காவல்துறை சார்பாக பரிந்துரை செய்யப்படும் என்று கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிஹிரன் பிரபாத் இன்று நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
No comments:
Post a Comment