முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களின் உரிமை குரல் எழுப்பியுள்ளது தங்களது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தி உள்ளதாக ஜவாஹிருல்லா செய்தியாளர்களுக்கு பேட்டி. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 30 May 2022

முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களின் உரிமை குரல் எழுப்பியுள்ளது தங்களது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தி உள்ளதாக ஜவாஹிருல்லா செய்தியாளர்களுக்கு பேட்டி.

பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களின் உரிமை குரல் எழுப்பியுள்ளது தங்களது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தி உள்ளதாக நாகர்கோவிலில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களுக்கு பேட்டி.

     

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நாகர்கோயில் வந்திருந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் " மத்தியில் ஆளும் பாஜக அரசு மாநில உரிமைகளை படிப்படியாக பிடிங்கி வருகிறது, ஒரே அரசு ஒரே நாடு என்ற போர்வையில் இருந்து வரும் மத்திய அரசு மாநிலங்களை எல்லாம் நகரசபையாக கருதி வருகிறது. 


மாநிலங்களின் மிகப்பெரிய வருவாயை எடுத்துக் கொண்டு அவர்களை மத்திய அரசிடம் கையேந்தும் அளவில் மத்திய அரசு வைத்துள்ளது கார்ப்பரேட் நிறுவனங்களை வாழ வைப்பதுதான் அவர்களது நோக்கம் எல்ஐசி போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயம் ஆக்கி வருகிறது. தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சுகள் தமிழக மக்களின் உள்ளக் குமுறலை பிரதிபலிப்பதாக அமைந்த கொள்கை பிரகடனம் என பொதுமக்கள் பாராட்டுகின்றனர். 


முந்தைய காலங்களில் அதிமுக மற்றும் பல்வேறு மாநிலங்களில் பிரதமர் முன்னிலையில் கூறுகிறார்கள் அதற்கு மாறாக முதல்வர் தமிழக மக்களின் உரிமைக் குரலை பிரதமரின் முன்னிலையிலேயே எழுப்பியுள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆகிறது இந்த காலங்கள் இந்தியாவின் கருப்பு காலமாக கருதப்படுகிறது என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment