இலங்கையில் உடனடியாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் சார்பில் மனு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 20 May 2022

இலங்கையில் உடனடியாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் சார்பில் மனு.

இலங்கையில் உடனடியாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்,பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைய வேண்டும் அப்போது தான் தமிழர்களின் வாழ்வு நலம் பெறும் எனவே அதற்காக இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் குரல் கொடுக்க வேண்டும் என குமரி மாவட்ட ஆட்சியரிடம் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் சார்பில் மனு.

   

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நிர்வாகிகள் இன்று நாகர்கோவிலில்  மாவட்ட ஆட்சியர்.அரவிந்தை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர் அந்த மனுவில் "இலங்கை தமிழர்களுக்கு வாழ்வளிக்கும் பொருட்டு அங்கு உடனடியாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைய வேண்டும் இதற்கு உலக நாடுகள் மூலமாக இதனை இந்தியா வலியுறுத்த தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி வற்புறுத்த வேண்டும்.


அப்போது தான் இலங்கை தமிழர்களின் வாழ்வு நலம் பெற்று இலங்கையில் ஜனநாயகம் மலரும்  என்பது ஒவ்வொரு தமிழர்களின் நம்பிக்கையாக உள்ளதால்  தமிழக மக்கள் ஜனநாயக கட்சி இதனை வலியுறுத்தி வருவதாக  குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்று குமரிமாவட்ட ஆட்சியர்.அரவிந்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டதாக செய்தியாளர்களிடம் மாவட்ட தலைவர்.குமரி ரசூல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment