கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்து அமைந்திருக்கும் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புத்தேரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை இன்று புத்தேரி குறிஞ்சி நகர் பகுதி ஊர் மக்கள் 50க்கும் மேற்பட்டோர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்,மேலும் குறிஞ்சி நகர், வள்ளுவர்நகர் பகுதியில் அமைய இருக்கும் குப்பை கிடங்கை மாற்ற வேண்டும், அங்கு மக்கும் குப்பை,மக்கா குப்பை தரம் பிரிக்கும் குப்பை கிடங்கு அமைய உள்ளது, அங்கு 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
அப்பகுதியானது குறுக்களான சாலை கொண்டது எனவே குப்பை கிடங்கு அமைந்தால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள், மேலும் நோய் தொற்று, மூச்சுத்திணறல் சுகாதாரக் கேடு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அங்கு அமைய இருக்கும் குப்பை கிடங்கை மாற்றி வேறு இடத்தில் வைக்க வேண்டும் என இன்று புத்தேரி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊராட்சி மன்ற தலைவரிடம் குறிஞ்சி நகர் ஊர் மக்கள் சார்பில் மனு அளித்துள்ளனர், மேலும் இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஊர் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படுவதாக ஊராட்சி மன்ற கவுன்சிலர் மாரிமுத்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment