புதிதாக கட்டப்பட்ட மாநகராட்சி கட்டிடத்திற்கு கலைவாணர் பெயரே தொடரும்; தென்னக மக்கள் இயக்கம் சார்பில் மாலை அணிவித்து பட்டாசு வெடிப்பு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 May 2022

புதிதாக கட்டப்பட்ட மாநகராட்சி கட்டிடத்திற்கு கலைவாணர் பெயரே தொடரும்; தென்னக மக்கள் இயக்கம் சார்பில் மாலை அணிவித்து பட்டாசு வெடிப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் புதிதாக கட்டப்பட்ட மாநகராட்சி கட்டிடத்திற்கு கலைவாணர் பெயரே தொடரும் என அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்  நாகர்கோவிலில் உள்ள கலைவாணர் சிலைக்கு தென்னக மக்கள் இயக்கம் சார்பில் மாலை அணிவித்து பட்டாசு வெடிப்பு.

    

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு புதிய மாநகராட்சி கட்டிடம் 10 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு திறக்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அந்த இடத்தில்  கலைவாணர் கலையரங்கம் என்ற பெயரை இருந்நது தற்போது அந்த கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டி முடித்து திறக்கப்பட உள்ள நிலையில் முன்னதாக இருந்த கலைவாணர் பெயரை மாற்றி கலைஞர் கலையரங்கம் என பெயர் வைக்க மாநகராட்சி தீர்மானம் கொண்டு வந்ததால் அதிமுக மற்றும் பாஜக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 


இந்த பிரச்சினை தொடர்பாக தென்னக மக்கள் இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தமிழக அரசு பழைய பெயரையே தொடரும் என அறிவிப்பு விடுத்ததை அடுத்து இன்று தென்னக மக்கள் இயக்கத்தினர்  தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கலைவாணர் சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தென்னக மக்கள் இயக்க நிறுவனர் ஐயப்ப கார்த்திக் கூறும்போது கலைவாணர் பெயரையே தொடரும் என அறிவித்த தமிழக முதல்வருக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். 

No comments:

Post a Comment