உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 May 2022

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி.

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது-இதில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஹரிகிரன் பிரசாத் போதை விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.. 

    

உலக புகையிலை ஒழிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது, இதனையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் புகையிலை மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கல்லூரி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. 


முன்னதாக புகையிலை மற்றும் போதை பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் புகையிலை ஒழிப்பு ஸ்டிக்கர்களை ஒட்டி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத், சமூக நலத்துறை அதிகாரிகள் ஆகியோர் போதை விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார், இந்த பேரணியானது ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வேப்பமூடு, மணிமேடை ஜங்ஷன் மற்றும் வடசேரி வழியாக மீண்டும் ஆட்சியர் ஆலயத்திற்கு வந்தடைந்தது இதில் 200க்கும் மேற்பட்ட  கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment