புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு கலைவாணர் பெயரை சூட்ட வலியுறுத்தி தென்னக மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 May 2022

புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு கலைவாணர் பெயரை சூட்ட வலியுறுத்தி தென்னக மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு கலைவாணர் பெயரை சூட்ட வலியுறுத்தி தென்னக மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு 5 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ஏற்கனவே கலைவாணர் கலையரங்கம் என்று பெயர் இருந்ததை மாற்றி கலைஞர் கலையரங்கம் என பெயர் வைக்க மாநகராட்சியில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனை எதிர்த்து அதிமுக மற்றும் பாஜக கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் இன்று நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை சமீபம் தென்னக மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 60 ஆண்டுகளாக கலைவாணர் பெயரில் இருந்த இந்த கட்டடத்தின் பெயரை மாற்றக்கூடாது. புதிய கட்டிடத்திற்கு கலைவாணர் பேரு வைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment