கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் அருகே உள்ள என்.எஸ்.கே. கலைவாணர் அரங்கம் நாகர்கோவில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது 50 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி சார்பாக கட்டப்பட்ட இந்தக் கலை அரங்கத்திற்கு கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் அரங்கம் என அரசு பெயர் சூட்டியது தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் அரங்கம் சீரமைக்கப்பட்டு வருகிறது நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகதிற்காக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது நாகர்கோவில் மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த மகேஷ் தலைமையிலான மாநகராட்சி திமுக நிர்வாகம் நாகர்கோவிலில் மாநகராட்சி சீரமைக்க பட்ட கட்டிடத்தில் ஏற்கனவே இருந்த கலைவாணர் என்ற பெயரை மாற்றி கலைஞர் என பெயர் மாற்றம் கொண்டு வரும் நடவடிக்கைக்கு மாவட்டம் முழுவதும் வலுக்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது - காங்கிரஸ் கட்சி, நாடார் சங்கங்கள், வெள்ளாளர் இளைஞர் பேரவை என பல்வேறு அமைப்புகள் தங்கள் எதிர்ப்பை முதற்கட்டமாக வெளிப்படுத்தி உள்ளனர்.
நாளை முதல் ஆர்பாட்டங்களில் ஈடுபட திட்டமிட்டு உள்ளனர் இன்று தென்னக மக்கள் இயக்கத்தினர் நாகர்கோவிலில் வடசேரி காவல் நிலையத்தை முற்றுகையிட வந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. வெள்ளாளர் இளைஞர் பேரவை நிர்வாகிகள் ஐயப்பன் கார்த்திக், சரவணா சுப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment