மோட்டார் பைக் திருட முயன்ற இரண்டு இளைஞர்களை கட்டிவைத்த பொதுமக்கள். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 17 June 2022

மோட்டார் பைக் திருட முயன்ற இரண்டு இளைஞர்களை கட்டிவைத்த பொதுமக்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி யில் இன்று இரண்டு இளைஞர்கள் மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தனர் ஆரல்வாய்மொழி பேருந்து நிலையம் அருகே வந்த போது மோட்டார் பைக்கில் இருந்து இறங்கிய ஒரு இளைஞன் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை கள்ள சாவி போட்டு திருட முயன்றான்.


இதனை அக்கம் பக்கத்தினர் பார்த்தனர். இதனையடுத்து அந்த இரண்டு இளைஞர்களையும் பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கட்டிவைத்து விட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விசாரணையில் அவர்கள் பூதப்பாண்டியை சேர்ந்த ஜோசப் (22) மற்றும் தடிக்காரன்கோணம் தைச் சேர்ந்த அக்சய் (19) என்று தெரியவந்தது. இது குறித்த ஆரல்வாய் மொழி பொலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 


போலீசார் சம்பவ இடம் வந்து இரண்டு இளைஞர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யாமல் அவர்களை நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 


இதனையடுத்து போது பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அந்த இரு இளைஞர்களையும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  

No comments:

Post a Comment