சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் கடலுக்குள் தலைகீழாக கவிழ்ந்த தண்ணீர் லாரி கிரேன் மூலம் மீட்கபட்டது, கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இன்று காலை முதல் மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று விசைப்படகுகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீன்வர்களுக்கு தேவையான ஐஸ் கட்டிகள், உணவுப்பொருட்கள், குடிதண்ணீர் உள்ளிட்டவற்றை படகுகளில் ஏற்றும் பணி தீவிரமாக நடைபெற்று, அப்போது சின்னமுட்டம் பகுதியை சேர்ந்த ஹெர்பர்ட் என்பவரின் விசைப்படகில் குடிநீர் நிரப்ப அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த ஜோதிராமன் என்பவர் தனக்கு சொந்தமான தண்ணீர் லாரியில் குடிநீரை ஏற்றி துறைமுகம் வந்தார்.
பின்னர் அவர் விசைப்படகில் தண்ணீர் நிரப்புவதற்காக விசைப்படகின் அருகில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரத்தில் அந்த வாகனம் தானாக நகர்ந்து கடலுக்குள் தலைகீழாக கவிழ்ந்தது, இதனையடுத்து அந்த டெம்போ கிரேன் மூலம் மீட்கப்பட்டது.தண்ணீர் லாரியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
No comments:
Post a Comment