முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் " பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு எட்டு ஆண்டுகள் வெற்றிகரமாக ஆட்சி செய்து வருகிறது. தனி மனித வருமானம் இரட்டிப்பாகியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு தனி மனித வருமானம் 79 ஆயிரம் ரூபாய் இருந்தது ஆனால் தற்போது ஒன்றரை லட்ச ரூபாயாக அதிகரித்துள்ளது. நாட்டில் 22 சதவீதமாக இருந்த வறுமைநிலை தற்போது 10 சதவீதத்திற்கும் குறைவாக மாறியுள்ளது. இதேபோன்று நமது நாட்டில் அயல்நாட்டு பணம் கையிருப்பு இரட்டிப்பாகி உள்ளது என்று கூறினார்.மேலும் மேலும் காங்கிரஸ் ஆட்சியில் சாலை வசதிகளை பொருத்தமட்டில் நெடுஞ்சாலை துறையில் ஒரு நாளைக்கு 11 கிலோமீட்டர் போடப்பட்டு வந்தது ஆனால் தற்போது பாஜக ஆட்சி காலத்தில் ஒரு நாளைக்கு 40 கிலோ மீட்டருக்கு மேலாக சாலைகள் போடப்பட்டு வருகிறது.
அதே போன்று விவசாயிகளின் தற்கொலையும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அதிகரித்து வந்தது தற்போது பாஜக ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு என்று வங்கிகளில் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டு வருகிறது இதனால் விவசாயிகள் தற்கொலை என்பது தடுக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர்.பொன் இராதாகிருஷ்ணன் கூறினார், அதே போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலைக்கு தேவையான மண் இல்லை என்று சொல்ல ஒரு அமைச்சரோ அரசோ தேவை இல்லை. தமிழகத்தில் கடந்த ஆட்சியின் போது கனிம வளங்கள் கடத்தப்படுவதாக டிவிட் போட்டவர்கள் இப்போது ஏன் இவற்றை தடுக்க முடியவில்லை? கன்னியாகுமரி மாவட்டத்தில் மண் மற்றும் கனிம வளங்களை எடுக்க கூடாது என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது.
அதேநேரம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மண் தேவை இதற்கு ஆட்சியாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? இப்போது பிற மாநிலங்களுக்கு இங்கிருந்து மண் மற்றும் ஜல்லி போன்றவை கடத்தப்படுகிறது இல்லையா? என்பதையும் அவர்கள் விளக்க வேண்டும் என்றுகூறினார்.
No comments:
Post a Comment