கலைஞரின் 99 – வது பிறந்தநாளை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும் குமரி வள்ளுவர் சிலை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 June 2022

கலைஞரின் 99 – வது பிறந்தநாளை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும் குமரி வள்ளுவர் சிலை.

கலைஞரின் 99 – வது பிறந்தநாளை முன்னிட்டு, முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலின் நடுவே கலைஞரால் உருவாக்கப்பட்ட  வானுயர திருவள்ளுவர் சிலைக்கு மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். 

உலக பொதுமறை நூலான திருக்குறளை உலகுக்கு தந்த திருவள்ளுவரின் பெருமையை உலகறிய செய்ய வேண்டும் என்ற நோக்கில்  சர்வதேச சுற்றுலா ஸ்தலமான கன்னியாகுமரியில்  முன்னாள் முதல்வர் கலைஞரால், கடலின் நடுவே 133 அடி உயர திருவள்ளுவர் சிலை உருவாக்கப்பட்டது. 2000 – ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி கலைஞரால் உருவாக்கப்பட்டு அவரது திருக்கரங்களால் திறக்கப்பட்டது. இதனை தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். 


கலைஞரின் 99 – வது பிறந்தநாளை முன்னிட்டு, முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலின் நடுவே கலைஞரால் உருவாக்கப்பட்ட  வானுயர திருவள்ளுவர் சிலைக்கு மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையின் சார்பில் மின்விளக்கு அலங்காரம் செய்யும் பணி மூன்று நாட்காளாக நடந்தது. திருவள்ளுவர் சிலைக்கு செய்யப்பட்ட மின் அலங்காரத்தை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்துச்செல்கின்றனர்.

No comments:

Post a Comment