தக்கலை பகுதியில் வாகன சோதனையில் வெள்ளை கலர் பைக் ஒன்றை போலீசார் நிறுத்தினர் முன்னுக்குப் பின் முரணாக பேசிய ஸ்டீபனை விசாரித்தனர். விசாரணையில் அவர் பல கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. ஸ்டீபன் என்பவரை கைது செய்தனர் நெல்லியார் கோணம் பகுதியை சேர்ந்த இவர் தற்போது கீழ் கல்குறிச்சி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவதும் இவன் தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் கைவரிசை காட்டியுள்ளார் மேலும் கொள்ளையடித்த பணத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ஸ்டார் ஓட்டல்களில் மது அருந்தி பெண்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்திருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
கைதான ஸ்டீபன் இரவு நேரத்தில் திருடுவது கிடையாது பகல் நேரத்தில் பூட்டிக்கிடக்கும் வீடுகளில் கைவரிசை காட்டுவதுதான் அவனது பழக்கமாகும் இவன் மீது சிவகங்கை திருப்பூர் ஈரோடு தஞ்சாவூர் திருச்சி மற்றும் கேரள மாநிலம் பத்தனம் திட்டா உள்பட பல்வேறு ஊர்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் நாற்பது திருட்டு வழக்குகள் உள்ளன.
திருப்பூர் போலீஸாரால் கைது செய்யப்பட்ட ஸ்டீபன் குண்டர் சட்டத்தில் சிறை சென்றுள்ளான். அதன் பிறகும் அவன் திருட்டை கைவிடவில்லை கடந்த மூன்று மாதங்களாக குமரி மாவட்டத்தில் குளச்சல் இரணியல் தக்கலை பகுதிகளில் 6 வீடுகளில் இவன் கைவரிசை காட்டியுள்ளார் அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது கொள்ளை அடித்து பதுக்கி வைத்திருந்த 55 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment