குளச்சலில் பைக்கில் பிரேக் போட்டவர் விழுந்து பலி. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 16 July 2022

குளச்சலில் பைக்கில் பிரேக் போட்டவர் விழுந்து பலி.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே குழந்தையேசு காலனியை சேர்ந்தவர் ஏசு  அடிமை வயது(41) கடலில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். கடந்த மாதம் 11ஆம் தேதி  இரவு 8.30 மணி அளவில் இவர் குளச்சலில் ஒரு திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் பின்னர் அவர் பைக்கில் அண்ணாசிலை சந்திப்பில் செல்லும்போது ஐம்பது வயது மதிக்கத்தக்க கண் பார்வையற்ற ஒருவர் சாலையின் குறுக்கே சென்றார். 


அவர் மீது பைக் மோதல் இருக்க ஏசு அடிமை பைக்கை ப்ரேக் போட்டு நிறுத்தி திரும்பினார் இதில் பைக் தடுமாறி சாய்ந்தது இந்த சம்பவத்தில் ஏசு அடிமை தலையில் பலத்த காயம் ஏற்பட்டது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தார் இதுகுறித்து அவரது அண்ணன் ஜான்சன் குளச்சல் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment