அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விசாரணை என்ற பெயரில் அமலாக்கத்துறை அலைக்கழிக்கப்படுவதை கண்டித்தும். இதற்கு எதிராக போராட்டம் நடத்திய ராகுல்காந்தி எம்பி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சத்தியாகிரக போராட்டம் குளச்சல் காமராஜர் சிலை முன்பு நடந்தது.
மாவட்ட தலைவர் கே. டி உதயம் தலைமை வகித்தார். நகர தலைவர் சந்திரசேகர் வட்டார தலைவர்கள் ஜெயசிங், செல்வராஜ், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளச்சல் தொகுதி எம்எல்ஏ பிரின்ஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள்.மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சாமுவேல் சேகர், யூசுப்கான், துணைத்தலைவர்கள் முனாப், மகேஷ் லாசர், மாவட்ட செயலாளர் ஜெயராஜ், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் எனல் ராஜ், பேரூராட்சி தலைவர்கள் மனோகரசிங், கிளாடிஸ், கோமள, மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் ஸ்டாலின், துணை தலைவர் லாலின், வட்டார தலைவர் டென்னிஸ், வைகுண்ட தாஸ், அசோக்ராஜ், உள்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment