கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் உள்ள அரசு பள்ளி வளாகம் முன்பு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கையில் பொட்டலத்துடன் நிற்பதாக கொல்லங்கோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே காவல் ஆய்வாளர் ரமா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.இதனை கவனித்த அந்த பெண் தப்பி ஓட முயன்றபோது போலீசார் அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தமிழக கேரள எல்லைப் பகுதியான அணுக்கோடு பகுதியில் தங்கியபடி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ராணி என்ற ஆட்டோ ராணி (வயது48)என்பது தெரியவந்தது.
மேலும் அந்தப் பெண்ணிடம் இருந்து ஒரு சுமார் 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அந்தப் பெண்ணை கைது செய்தனர்.
No comments:
Post a Comment