நாகர்கோவில் மாநகராட்சி பொது தகவல் அலுவலருக்கு ₹20,000 அபராதம் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 11 August 2022

நாகர்கோவில் மாநகராட்சி பொது தகவல் அலுவலருக்கு ₹20,000 அபராதம்

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு எதிரான ஏழு மேல் முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் இரண்டு வழக்குகளில் அபராதமும் சம்மந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான  நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு. 


மேலும் தொடர்ந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகுந்த தகவல்களை வழங்காத நாகர்கோவில் மாநகராட்சி பொது தகவல் அலுவலரை கடுமையாக கண்டிப்பதாகவும் ஆணையர் தெரிவித்தார். அபராதமாக ஒரு வழக்கில் பொது தகவல் அலுவலருக்க ₹20,000/- மும் பொறியாளருக்கு ₹5,000/- விதிக்கப்பட்டது. மற்றொரு வழக்கில் பொறியாளருக்கு ₹20000/- மும், விதிக்கப்பட்டு அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யவும் இதனுடன் கேட்கப்பட்ட தகவலையும் 15 நாட்களுக்குள் வழங்க தகவல் ஆணையர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். 

No comments:

Post a Comment