நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் இந்திய ராணுவம் சார்பில் கன்னியாகுமரியில் இருந்து 75 தேசிய கொடிகளுடன், 75 கிலோமீட்டர் தூரம் அணிவகுத்து பயணம் செய்து திருவனந்தபுரததிற்கு செல்லும் நிகழ்ச்சி கன்னியாகுமரியில் தொடங்கியது.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு 75 கிலோமீட்டர் தூரத்தை, 75 ராணுவ வீரர்கள், 75 தேசிய கொடியை ஏந்திய படி அணிவகுத்து செல்லும் நிகழ்ச்சி கன்னியாகுமரியில் துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் போது ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளும், இராணுவ வாத்திய குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் ஆகிய நடைபெற்றன. பின்னர் அவர்கள் பேரணியாக திருவனந்தபுரத்திற்கு அணிவகுத்து சென்றனர். இந்த கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சியை சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் கண்டு ரசித்தனர்.
- தமிழக குரல் கன்னியாகுமரி செய்திகளுக்காக ஒளிபதிவாளர் சாந்தியுடன் தலைமை செய்தியாளர் L.குமரன்.
No comments:
Post a Comment