குமரி -கேரளா எல்லைப் பகுதியான பாறசாலை பகுதியை சேர்ந்தவர்கள் அருண்(24)விபின் (23) ஆகியோர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதாக பாறசாலை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் வீட்டை சுற்றிவளைத்து அதிரடி சோதனை மேற்கொண்டனர் அப்போது அங்கு 25-க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அடுத்த காஞ்சாம்புறம் பகுதியில் உள்ள ஒரு பட்டாசு கடையிலிருந்து ஓலைப்பட்டாசு களை வாங்கி வெடிமருந்துகளை தனியாகப் பிரித்தெடுத்து அதில் உள்ள வெடிமருந்துகளை வைத்து நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்தது தெரியவந்தது.
குற்றவாளியை அங்கிருந்து கேரள போலீசார் அழைத்து வந்து நிலையில் உள்ள பட்டாசு கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தினார் மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஏற்கனவே இவர்கள் மீது அடிதடி வழக்குகள் மற்றும் போதை பொருள் கடத்தல் வழக்கு மற்றும் சமூக விரோதச் செயல்பாடுகளில் ஈடுபட்டவர் என தெரியவந்தது.
மேலும் வெடிகுண்டு மற்றும் ஆயுதங்களைப் பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குமரி கேரள எல்லைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment