வெளிநாட்டு சிறைகளில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை - விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை! - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 8 August 2022

வெளிநாட்டு சிறைகளில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை - விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!

வெளிநாட்டு சிறைகளில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!

 

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு எஸ். ஜெயசங்கர் அவர்களை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விஜய் வசந்த் அவர்கள் சந்தித்து கோரிக்கைகள் முன் வைத்தார். வெளிநாட்டு சிறைகளில் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள மீனவர்களின் துயரங்களை எடுத்துக் கூறி கடலில் மீன் பிடிக்க செல்லும்போது வழி தவறி அந்நிய நாட்டு கடல் எல்லைக்குள் செல்லும் மீனவர்களை அந்நாட்டு அரசாங்கம் கைது செய்வதை எடுத்துரைத்தார். 


குறிப்பாக இந்தோனேசிய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைபட்டிருக்கும்  கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மூன்று மீனவர்களை அரசு தலையிட்டு விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். சிறையில் இருந்த போது ஒரு மீனவர் உயிரிழந்ததையும் மற்றும் மீனவர்களின் படகுகள் மற்றும் பொருட்கள் அந்த அரசின் வசம் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். 


இத்தகைய கைது நடவடிக்கைகளை தவிர்க்க கடல் சார்ந்த நாடுகளுடன் ராஜதந்திர ஒப்பந்தத்தை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும், அத்தகைய பேச்சு வார்த்தைகளின் போது கடலோர பாராளுமன்ற தொகுதிகளின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து கருத்து கேட்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

 

மேலும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் மீனவர்கள் வேலைக்கு சேர்ந்தவுடன் அவர்கள் பாஸ்போர்ட் வேலை செய்யும் நிறுவனங்கள் பிணையாக எடுத்துக் கொள்வதை சுட்டிக்காட்டி அவர்கள் நாடு திரும்ப விரும்பும் போது பாஸ்போர்ட் கிடைக்காமல் தவிப்பதை எடுத்துக் கூறினார். குமரி மாவட்டத்தை சேர்ந்த எட்டு மீனவர்கள் ஓமான் நாட்டில் இத்தகைய சந்தர்ப்பத்தில் சிக்கி அலைகழிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார். 


இந்திய தூதரகங்கள் இந்த விஷயங்களில் தலையிட்டு இந்த ஊழியர்களை உடனடியாக இந்தியாவிற்கு பத்திரமாக  திருப்பி அனுப்ப வழிவகை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 

No comments:

Post a Comment