கன்னியாகுமரியில் அநீதிக்கு எதிரான அரசியல் எழுச்சி மாநாடு! - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 22 August 2022

கன்னியாகுமரியில் அநீதிக்கு எதிரான அரசியல் எழுச்சி மாநாடு!

கன்னியாகுமரியில் அநீதிக்கு எதிரான அரசியல் எழுச்சி மாநாடு!, மாநில தலைவர் நெல்லை முபாரக் பங்கேற்பு.


SDPI கட்சி கன்னியாகுமரி மாவட்டம்,  கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சார்பாக, அநீதிக்கு எதிரான அரசியல் எழுச்சி மாநாடு, கன்னியாகுமரியில் சட்டமன்ற தொகுதி தலைவர்  P.மைதீன் அவர்கள் தலைமையில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது.


மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார், மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில்  பத்தாம் வகுப்பு, மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் மற்றும்,சுகாதாரத் துறையில் சிறப்பாக பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு நினைவு பரிசு வழங்கியும் சிறப்பித்தார்.


மேலும் இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில துணை தலைவர் காலித் முஹம்மது, மகாகுரு பாலபிரஜாபதி அடிகளார் (சமத்துவ மடாதிபதி, சாமித்தோப்பு), SDPI கட்சி நெல்லை மண்டல தலைவர் ஜூல்பிக்கார் அலி,மாவட்ட தலைவர் சத்தார் அலி, மாவட்ட பொதுச் செயலாளர் சாதிக் அலி ஆகியோர் உரையாற்றினார்கள்.


மாநாட்டில் SDPI கட்சியின் மாவட்ட, தொகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment