கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செப்டம்பர் மாதம் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை 148 நாட்கள், 3700 கி. மிட்டர் தூரம் தினமும் 25 கிமீ இந்திய ஒற்றுமை நடைபயணம் என்ற பெயரில் இளம்தலைவர் ராகுல்காந்தி பாதயாத்திரை செல்லுகிறார்.
இது குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் இன்று கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது முன்னாள் மத்திய அமைச்சர் ஜே. டி சீலன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத், பாராளுமன்ற உறுப்பினர்கள் தஜோதிமணி MP, விஜய்வசந்த் MP, சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் MLA, மாவட்ட தலைவர்கள் KT.உதயம், பினுலால்சிங், மாநில செயலாளர் சீனிவாசன், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ராபின்சன், கன்னியாகுமரி பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் ஜவகர், கவுன்சிலர் தாமஸ் மற்றும் ஆரோக்கியராஜன், சேகர் உடன் பலர் இருந்தனர்.
No comments:
Post a Comment