நாகர்கோவில் அருகே மணிகட்டிபொட்டல் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அமுதன். இவரது மகன் ஜெகந்தர் (வயது 16). இவர், நாகர்கோவிலில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நான்கு தினங்களுக்கு முன்பு ஜெகந்தர் தனது நண்பர் அர்ஜுன் (15) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் டியூசனுக்கு சென்றார். கோட்டார் வைத்தியநாதபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் ஜெகந்தர்,அர்ஜுன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த இருவரையும் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்றி ஜெகந்தர் பரிதாபமாக இறந்தார்.
No comments:
Post a Comment