கன்னியாகுமரி மாவட்டம் மணவாளகுறிச்சி அருகே வெள்ளமடி பூமி பாதுகாப்பு சங்க ஐம்பதாம் ஆண்டு பொன்விழா தலைவர் பத்மதாஸ் தலைமையில் நடந்தது. விழாவில் மேயரும், கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான மகேஷ், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக அறிவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், பிளாஸ்டிக் ஒழிப்பு, மாநகராட்சி பகுதிகளில் தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட பல பணிகள் மேற்கொண்டுள்ளதாகவும், கடந்த ஒரு ஆண்டில் வியத்தகு மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment