TNPSC Group - I போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி தொடர்பாக குமரி மாவட்ட ஆட்சிதலைவரின் அறிவிப்பு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 19 August 2022

TNPSC Group - I போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி தொடர்பாக குமரி மாவட்ட ஆட்சிதலைவரின் அறிவிப்பு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி I போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் நாகர்கோவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் ஷாம் பிரசாத் முகர்ஜி தேசிய ரூர்பன் (RURBAN) திட்டம் மூலமாக நடத்தப்படவுள்ளது.


இந்த தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 21.08.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அரசு மேல்நிலைப்பள்ளி, கண்டன்விளையில் காலை 9 மணி அளவில் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை அலுவலக வேலைநாட்களில் நடைபெற இருக்கிறது. 


இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 22.08.2022 ஆகும். இந்த பயிற்சி வகுப்பில் சேரவிரும்பும் மாணவர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் அரசு மேல்நிலைப்பள்ளி, கண்டன்விளைக்கு நேரடியாக வருகை புரிந்து தன்னார்வ பயிலும் வட்ட உறுப்பினராக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளமான https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கு பாடக்குறிப்புகள் மற்றும் இணையதள மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 


மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.. 

No comments:

Post a Comment