காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 19 August 2022

காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கூட்டம். மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு  அறிவுறுத்தல்களை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.D.N. ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கூட்டம் (Monthly Crime Meeting) மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து  காவல்துறை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் அரசு குற்ற வழக்கறிஞர்கள், மருத்துவ அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள், தீயணைப்புத்துறை அதிகாரிகள், சிறை அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர். காவல்துறையினரும் மற்ற துறையினரும் இணக்கமாக செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது..


இதில் காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கினார்,  கஞ்சா குட்கா புழக்கம் மாவட்டத்தில் அறவே இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும், கஞ்சா வழக்கில் கைது செய்யப்படும் நபரின் வங்கி கணக்குகள், மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்குகள்  உடனடியாக முடக்கப்பட வேண்டும், கைது செய்யப்பட்ட நபரின் வீடு சோதனையிடப்பட்டு வழக்குக்கு தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட வேண்டும். கஞ்சா குட்கா எங்கிருந்து பெற்றனர் போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும்.        


ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் எந்தவிதமான பாராபட்சமும் இருக்கக் கூடாது. தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும்  நபருக்கு சரித்திரபதிவேடு தொடங்கப்பட வேண்டும், ரவுடிகளுக்கு நன்னடத்தை பிணை வாங்கப்பட்டு அவர்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர் குண்டத் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.


 POCSO வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இழப்பீடு பெற்றுத் தர வேண்டும், கந்து வட்டி தொடர்பான வழக்குகளில் உடனுக்குடன் விசாரணை மேற்கொண்டு உடனடியாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், சமூக ஊடகங்களில் வன்முறையை தூண்டும் விதத்தில்  பதிவுகள் பதிவிடுவர்களை மாவட்டத்தில்    SOCIAL MEDIA MONITORING CELL ஏற்படுத்தப்பட்டு social media பதிவுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.


அரசு அதிகாரிகளின் பெயரில்  Amazon Gift Card மோசடி, Loan app மூலமாக தரவுகளை சேமித்து வைத்து மிரட்டும் சைபர் குற்றவாளிகளினால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அந்தந்த காவல் நிலைய எல்லைக்குள் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.


விநாயகர் சதுர்த்தி சிறப்பான முறையில் பாதுகாப்பு அலுவல் செய்வதற்கு அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும். இவ்வாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment