கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மருதங்கோடு வலியவிளை சேர்ந்தவர் சசிகுமார் (42) இவர் 2010 ஆம் ஆண்டு ஒரு திருட்டு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியாக இருந்து வந்தார். அவரை 2010-லிருந்து போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று அவர் மருதன் கோட்டில் உள்ள வீட்டுக்கு வந்ததாகபோலீசாருக்கு தெரிய வந்ததை அடுத்து தலைமறைவாக இருந்த அவரை தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
No comments:
Post a Comment