குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள உதயமார்த்தாண்டம் பிச்சவிளையை சேர்ந்தவர் குமார் மகன் சரவணன் (வயது 32). இவர் ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வந்தார்.
இவர் தனது திருமணத்திற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி விடுப்பில் ஊருக்கு வந்துள்ளார், கடந்த 21-ம் தேதி அவருக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. நாளை (16-ம் தேதி) அவர் பணிக்கு சேர வேண்டும்.
இந்நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது, இதுகுறித்து அவரது உறவினர்கள் கருங்கல் போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற கருங்கல் போலீசார் பிணத்தை வழக்கு பதிவு செய்து
உடலை பிணக்கூறாய்விற்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், திருமணம் ஆன ஒரே மாதத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர் மாரடைப்பால் இறந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
No comments:
Post a Comment