கன்னியாகுமரி மாவட்டம் தெள்ளாந்தியில் மலையடிவாரத்தில் வாழை தோட்டங்கள் பயிரிடப்பட்டு விவசாயம் செய்து வருகிறார்கள். தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை கூட்டங்கள், அங்குள்ள வாழை தோப்பில் இறங்கி 500 க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளது, அப்பகுதில் தொடர்ச்சியாக காட்டு யானைகள் வாழைப்பயிருகளை சேதப்படுத்தி வருகின்றன.
இதில் பாதிக்கப்பட்ட விவசாயி மணிகண்டன் நிவாரணம் கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் அது நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது, தற்போது சேதப்படுத்திய 500 க்கும் மேற்பட்ட வாழை மரங்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் வாழ்வாதாரம் இழந்த நான், எனது தற்கொலைக்கு அரசுதான் காரணம் என கடிதம் எழுது வைத்து தற்கொலை செய்து கொள்ள போவதாக விவசாயி வேதனையோடு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment