வீட்டில் புகுந்த நல்ல பாம்பு வனக்காப்பாளர் உதவியுடன் பிடிக்கப்பட்டது. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 9 September 2022

வீட்டில் புகுந்த நல்ல பாம்பு வனக்காப்பாளர் உதவியுடன் பிடிக்கப்பட்டது.

நாகர்கோவில் அடுத்த புத்தேரி கணேஷ் நகர் பகுதியில் வசித்து வரும் ஆண்டையார் என்பவர் வீட்டில் நேற்று இரவில் நல்ல பாம்பு புகுந்தது, பின்னர் வீட்டில் உள்ளவர்கள் பாம்பை விரட்ட முயற்சித்தனர், ஆனால் அது வீட்டுக்குள் பதுங்கிக் கொண்டது இதனால் பதட்டம் அடைந்த ஆண்டையார் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.


அதன் பெயரில் வனக்காப்பாளர் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பதுங்கிய நல்ல பாம்பை தேடினார், நீண்ட நேரம் தேடிய பிறகு வீட்டின் சமையலறையில் பதுங்கி இருந்தது தெரியவந்தது, பின்னர் பதுங்கிய நல்ல பாம்பை வனக்காப்பாளர் பிடித்து குவளையில் அடைத்து, அடர்ந்த காட்டில் விடுவதற்காக எடுத்து சென்றார்.

No comments:

Post a Comment