கன்னியாகுமரி மாவட்டத்தில் 7 கற்குவாரிகள் அரசு அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. இதில் 4 கற்குவாரிகள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. மீதமுள்ள 3 குவாரிகள் மலையிடவாழ் பகுதிகளில் (HACA) முறையான HACA Clearance மற்றும் மாநில சுற்றுப்புறசூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி பெற்றும் இயங்கி வருகின்றன. இதில் தனியார் செய்தி தொலைக்காட்சியில் தெரிவித்த குவாரி உதவி இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.142/பமசு/2020 நாள். 05.05.2021-ன் படி குத்தகை ஒப்பந்தம் 30.07.2021 அன்று நிறைவேற்றப்பட்டு 29.07.2026 வரை நடைமுறையில் உள்ளது. இக்குவாரி முறையான அனுமதி பெற்று இயங்கி வரும் குவாரி ஆகும். இக்குவாரியில் DGPS Survey முடிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
இக்குவாரியில் ஏதேனும் விதிமீறல் இருப்பின் தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளின் கீழ் மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு ஆண்டிலும் Drone survey செய்யப்பட்டு எடுக்கப்பட்ட கற்களின் அளவீடு குத்தகை காலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கும். எடுக்கப்பட்ட கனிமத்தின் அளவிற்கும் வேறுபாடு இருப்பின் கனிம உரிம தொகையும், அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் எடுக்கப்பட்டிருப்பின் சிறு கனிம சலுகை விதி 36 (A)-ன் கீழ் அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக மேலும் அதிக விபரம் தெரிந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புவியியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தை அணுகுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் திரு.அ.பாலமுருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
No comments:
Post a Comment