பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கற்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 September 2022

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கற்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்.


குமரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் சுடலை முருகன், வருவாய் ஆய்வாளர் ஸ்ரீகுமார் ஆகியோர் நேற்று காலையில் அஞ்சுகிராமம் சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கல் சிற்பம் செய்ய பயன்படுத்தப்படும் கற்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. அதை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது உரிய அனுமதி இல்லாமல் கற்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து அதிகாரிகள் லாரியையும், பலலட்சம் ரூபாய் மதிப்புள்ள கற்களையும் பறிமுதல் செய்து அஞ்சுகி ராமம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் லாரியை ஓட்டி வந்த ஆண்டார் குளத்தைச் சேர்ந்த டிரைவர் ஜான்சன் (வயது 43) என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். 

No comments:

Post a Comment