ஓணப்பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ராயகோட்டை, சேலம் பொம்முடி, ஓசூர், திண்டுக்கல், திருச்சி ஆகிய இடங்களில் இருந்து சுமார் 50 லாரிகளில் குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
ஓணம் சிறப்பு விற்பனை நேற்று இரவு தொடங்கி விடிய விடிய நடந்தது. இதன்காரணமாக அனைத்து பூக்களும் விற்று தீர்ந்தன. அதன்படி நேற்று இரவு முதல் இன்று மதியம் 12 மணி வரையில் 500 டன் பூக்கள் விற்பனையானது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர், பூக்களின் விலை உயர்ந்ததால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment