நாகர்கோவில் மாநகராட்சியில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த மேயர் மகேஷ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக மாநகரப் பகுதியில் உள்ள 52 வார்டுகளிலும் நேரடியாக சென்று ஆய்வு செய்ய அவர் திட்டமிட்டு உள்ளார்.
இதைத் தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி 7 மற்றும் 8-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மேயர் மகேஷ் மோட்டார் சைக்கிள் சென்று ஆய்வு செய்தார். தெலுங்கு செட்டி தெருவில் தனது ஆய்வு பணியை தொடங்கிய மேயர் மகேஷ் பள்ளிவிளை, திருவள்ளுவர் தெரு, வாத்தியார்விளை ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார்.
தெருத் தெருவாக அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகளை கேட்டு அறிந்த அவர் அந்த வார்டுகளில் செய்ய வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
No comments:
Post a Comment