கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் 68-வது நினைவு நாளையொட்டி, குமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 September 2022

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் 68-வது நினைவு நாளையொட்டி, குமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை


கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் 27.07.1876-ஆம் ஆண்டு பிறந்தார்.  26.09.1954- ஆம்  ஆண்டு இயற்கை எய்தினார்கள். அன்னாரது பணியினை நினைவு கூறும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒவ்வொரு வருடமும் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் அன்று மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. 


அதனடிப்படையில்  கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் 68-வது நினைவு நாளையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் திரு.க.சேதுராமலிங்கம் அவர்கள் சுசீந்திரம் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு; மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.  


இந்நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.பா.ஜாண் ஜெகத் பிரைட், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் திரு.சேகர், சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் திருமதி.அனுஷ்யா, வருவாய் அலுவலர் திரு.லெலின், சுசீந்திரம் கிராம நிர்வாக அலுவலர் திரு.பாலகிருஷ்ணன்  உட்பட பலர் கலந்து கொண்டார்கள். 

No comments:

Post a Comment