கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், இவர் இன்று காலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றவர் அழகியமண்டபம் பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துவிட்டு நண்பர்களைப் பார்க்கச் சென்றுள்ளார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை யாரோ மர்ம மனிதர்கள் திருடிச் சென்றுள்ளனர், இது குறித்து தக்கலை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment