கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த சாமியார்மடத்தில் செயல்பட்டு வரும் விஜயகுமார் மருத்துவமனை நிறுவனரும், அகில இந்திய மருத்துவர் சங்க முன்னாள் தலைவரும், காமன்வெல்த் மருத்துவ சங்க முன்னாள் துணைத் தலைவருமான மருத்துவர் விஜயகுமாரின் மகனும், தலைசிறந்த குழந்தைகள் மருத்துவருமான மருத்துவர் ராம் சந்தர் நேற்று மாலை உடல் நலக்குறைவால் திடீரென மரணமடைந்தார்.
இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்தப் பகுதி மக்களிடம் அன்பாக எந்தவித கெளரவமும் இல்லாமல் சாதாரண அடித்தட்டு மக்களிடமும் நேரடியாக பழகும் பழக்கம் கொண்ட இவரின் இழப்பு சாமியார்மடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment